ஏதோ ஓர் வரி ஏதோ புத்தகத்தில் ...!
&
ஏதோ ஓர் வரி ஏதோ ஓர் புத்தகத்தில் இன்று--
எங்கோ அருவமாய் என் மனவிழிகளில் பழகு உருவமாய்
எனதருமைப் பெற்றோரை
என் தியானச் சிந்தை நேர் உயரே உயிர்ப்பித்தது ---
கற்றை கற்றையாய் நினைவுகள் வெண் தழலாய்
செங்கொழுந்தாய் என்னுள் எழுந்து என்னைத் தகித்து
என் கெட்டவை எல்லாம் பட்டு அழிய வெண் திருநீறாய்
நல்லவையாய் நான் கைப்பிடியாய்த் தூர்ந்துவிட--
அடர் அருவியென அவர் அங்கைத்தலம் ஜனித்த
அருட் பிரவாகங்கள் என்னுள் இங்கிதமாய் இறங்க
மின்னல் விரல்களாய் சக்தியின் துள்ளோட்டம்
அக்கைப்பிடி அணுவுக்குள் அணுவென விரைய
ஒளிமயமாய் ஓர் உருவாய் என்னில் நான் ஜனித்தேன்-
இன்று நிகழ்ந்தது இது சத்தியம் .
-----சந்திர கலாதர்
No comments:
Post a Comment