Saturday, August 6, 2011

LORD ! SHOW ME THE WAY !

வழி விளக்கம் அருள்வாய் .
&
நள்ளிரவின் கறுமை-
திசை புரியா வான்வெளி -
சரஞ்சரமாய் காற்றில் நீந்தும்
சுற்றுலாப் பறவைகள் ஓர் நோக்காய் --
எங்கேயோ நீ அமர்ந்திருக்கிறாய்
கலங்கரை விளக்கமாய்-
கச்சிதமாய் வழி காட்டுகிறாய் --
&
சஞ்சலங்களால் குருடாகி
தன்னந் தனியாகி எங்கெங்கோ
பொழுதெல்லாம் அலைகிறேன் --
என் பாழும் மனதிற்கு
கண்மலர் ஒளி விரித்து
வழி விளக்கங்கள் அருளினால் என் ?
&
-- சந்திர கலாதர்

No comments:

Post a Comment