Thursday, August 18, 2011

O THE NIGHT WATCHMAN !

ஒ ..இரவுக் கூர்க்காவே..!
&
நிலவே !
உன்னைப் புதிய பார்வை
பார்க்கப் போகிறேன் --
&
எத்தனை குழந்தைகட்கு
யுகம் யுகமாய் நீ
பாற் சோறு ஊட்டி இருப்பாய் !
&
எத்தனை குழந்தைகள்
பிஞ்சுக் கரங்களால்
உன்னைப் பறிக்க வானுள்
விரல் விரித்து இருப்பர்--
&
எத்தனை தாய்மார்கள்
தங்கள் மழலைகளின் முகங்களில்
உன்னைக் கற்பனைத்து இருப்பர் --
&
எத்தனை நங்கையரின்
நெஞ்ச மஞ்சங்களில்
நீ சிறைப்பட்டு இருப்பாய் !
&
எத்தனை கவிஞர்களின்
பித்தான முத்தங்கள்
உன்னை ஈரப்படுத்தி இருக்கும்--
&
எத்தனை விரக தாபப் பார்வைகள்
பிரிவு நேரங்களின்
எட்டாத் தொலைவுகளில் இருந்து
உன்னில் ஒரே நொடியில்
புகுந்து சங்கமித்திருக்கும் --
&
காதலர்களின் பிரிவுத் துயரங்கள்
உன்னைத் தேய்த்து விடுகின்றனவோ ?
அவர் கூடல் நிறைவுகள்
உன் பூரிப்பின் நிலைக்களனோ ?
ஓ ! இரவுக் கூர்க்காவே ..!
&
---சந்திர கலாதர்
[29.07.1987,காலை 09.45]

No comments:

Post a Comment