அவன் வைத்த நஞ்சா ?
&
அவன் தகாதன சொன்னான் -
மௌனமாய்க் கேட்டு இருந்தேன் ;
பின் -
என்னுள் எட்டிப் பார்த்தேன் ..
ஆ..ஆழத்தில்....
வெகு வெகு ஆழத்தில்
ஓர் சிறு உருவம் --
சிறு முளை விட்டதுபோல்
கூனி அமர்ந்திருந்தது -
பார்க்கையிலேயே அது வளர்ந்தது ..
விரைவாய் ..பெரிதாய் ..
விண்கல வேகமாய் -
ஒ !
அவன் வைத்த நஞ்சா ?
இத்தனை பெரிதாய்.கனமாய்
என் தலை மீது அழுத்துகிறது--
அறிவைத் தீய்க்கிறது !
&
சந்திர கலாதர்
No comments:
Post a Comment