Thursday, June 30, 2011

Murder Of Rajiv Gandhi In 1991

ராஜீவ் காந்தியின் படுகொலை


கோழைக் கும்பலின்
கோரச் செயலால்
கமல முகத்தான்
கருகிச் சிதைந்தனனே  ...!
அந்தோ ! என்னென்பேன் --
ரத்தப் புயலில்
அன்பின் தீபம்
அணைந்தே போனதம்மா..!
நாட்டின் நலம் எண்ணி
வெடிமொழி ஒடுக்க
எழுந்தனள் வீறுடன்
அன்று உனதன்னை.. 
நெஞ்சிற்  குண்டேந்தி
ரத்தக்     களறியாய்     
இடுப்பில் உடைந்தே  
இம் மண்ணில் சரிந்த 
ரத்தமும் உலரவில்லை...!
சற்றும் அயர்வின்றி
இராப்பகல் இன்றி 
நிலை அரசு ஒன்றினை 
நாட்டிற்கு நயந்திட 
திக்கெல்லாம் கரம் கூப்பி 
கைகேட்டு வந்த உனை 
தமிழ்  நாட்டின் தலைக் குனிவாய்
இருள் நெஞ்சப் பதர் ஒன்று 
இருள் வேளை கொன்றதடா..!
பிண நரிகளின்  நய  வஞ்சகம்  
மறுபடி வென்றதையோ...!
என்ன வேதனை இது ?
ஓர் குடும்பமே 
கொலை வாயில்..!
நாட்டின் நல்லோரே --
காந்தி மகான் பெயர் கொண்டால் 
படுகொலைதான் பரிசாமோ ?

----சந்திர கலாதர்         
   

No comments:

Post a Comment