நம்ப முடியவில்லை !
&
இளங்காலைக் காற்றில்
&
இளங்காலைக் காற்றில்
வேப்ப மரத்தடியில்
இனிமையாய்ப் புரண்டிட
இமை இறக்குகையில் --
எதிர் வீட்டுச் சிறுவன்
பதற்றமுடன் எழுப்புகிறான் --
" ராஜீவ் காந்தி செத்து விட்டார் !
நேத்து ராத்திரி ஸ்ரீ பெரும்பூதூரில்
பத்தரை மணிக்குக் கொலையுண்டார் ! "
நம்பவில்லை--
நம்பத்தான் கூடுமோ ?
சிறுவன் சிதறிய சேதியைச்
சிரிப்பில் எற்றித் தள்ளுகிறேன் --
"யாரிடமடா ஏமாற்று வேலை ?
நூல் சுற்றுகிறாயா ? "
" உண்மை! உண்மை !" என
விழிகள் பதறுகையில்
விழி ஓரங்களில்
உதட்டு அசைவுகளில்
விஷமங்கள் தேடித் திரிகிறேன் !
"தமிழ் நாட்டிலாவது...
அதுவும் திருபெரும்பூதூரிலாவது ...
அதிலும் ராஜீவையாவது.
அதுவும் கூடக் கொல்வதாவது ?
பூ சூட்டடா
வேறு பெரும் காது பார்த்து..! "
சிறுவன் திகைக்கிறான் -
சொன்னதையே சொல்கிறான் ;
அவனுக்கே என் சொல்லால்
அவன்மீதே அவநம்பிக்கை -
நிமிடங்கள் நகர்ந்தபடி
மெல்லப் பேசத் துவங்கினவே --
நம்பிக்கை மலை ஒன்றின்
நாடி தளர்கிறது--
தெருவோடும் மௌன நதிதனில்
சிறுசிறு குமிழ்களாகச்
சேதி வெடிக்கையிலே
நம்பாமல் நம்பத் துவங்கி
சோகச் சுழி சிக்கித் தவிக்கின்றேன் !
உண்மையே ! கொடு நஞ்சே !
நெஞ்சு விழுங்க முடியலையே.---
இதயம் தாளலையே --
இளைஞன் ஒருவனின்
அழகான சரித்திரத்தை
செங்குருதியில் தோய்த்தாயே--.
எளியோரை ஏற்க நினைத்தானை
தாய்மடியில் துண்டு போட்டாயே---.
தேசத் தாய் காக்கக்
கைகேட்டு வந்தானைச்
சிலைத் தாயும் துடித்திடக்
கூறு போட்டது என்ன நீதி ?
கொலைக் கும்பல் இன்று
சிங்களம் இருந்திறங்கி
புலி வேடமிட்டு வீரர் போர்வையிலே
குருதி வெறி கொண்டு
அலைகின்ற தமிழ்க் காட்டினிலே,
தமிழ்நாடே !
தூய உன் சரிதை இன்று
தீக் காயம் கொண்டதுவே..!
இந்திய வரலாற்றில் இன்று
தலைக் குனிவாய் ஏன் ஆனாய் ?
தாயே !
எவ்வேளைதனில் நீ ஜனித்தாய் ?
எவ்வேளைகளில் இரு மைந்தரையும்
பெற்றளித்தாய் இந்நாட்டிற்கு ?
மூவருமே இயற்கையாய்
இயற்கை எய்திடாது
முழு உடலை இம்மண்ணில்
சரியாது போனதென்ன ?
தேச நலன் கருதி
செங்குருதிச் சாரல்களைப்
பூமியில் சொரிந்ததென்ன ?
ஏ ..பாதகியே !
கொடியாளே 1
கல் நெஞ்சினளே !
என்ன செய்தார் அவர் பாவம் ?
ரத்தவெறி கொண்ட
பேடி நாயே --
எவர் பின்னால் ஏவியவர் ?
எவ்விலைக்கு உனை விற்றாய் ?
துப்பாக்கிக் கொலைஞர்களை
விடுதலை வீரராக்கிப்
புலிக் கோடிட்ட தமிழகமே !
நன்றாகத் தலை குனிவாய் ..!
--சந்திர கலாதர்
[ மே ,1991 ]
உண்மையே ! கொடு நஞ்சே !
நெஞ்சு விழுங்க முடியலையே.---
இதயம் தாளலையே --
இளைஞன் ஒருவனின்
அழகான சரித்திரத்தை
செங்குருதியில் தோய்த்தாயே--.
எளியோரை ஏற்க நினைத்தானை
தாய்மடியில் துண்டு போட்டாயே---.
தேசத் தாய் காக்கக்
கைகேட்டு வந்தானைச்
சிலைத் தாயும் துடித்திடக்
கூறு போட்டது என்ன நீதி ?
கொலைக் கும்பல் இன்று
சிங்களம் இருந்திறங்கி
புலி வேடமிட்டு வீரர் போர்வையிலே
குருதி வெறி கொண்டு
அலைகின்ற தமிழ்க் காட்டினிலே,
வெண்புறாவே --
அன்பேந்தி மட்டும் ஏன் வந்தாய் ?தமிழ்நாடே !
தூய உன் சரிதை இன்று
தீக் காயம் கொண்டதுவே..!
இந்திய வரலாற்றில் இன்று
தலைக் குனிவாய் ஏன் ஆனாய் ?
தாயே !
எவ்வேளைதனில் நீ ஜனித்தாய் ?
எவ்வேளைகளில் இரு மைந்தரையும்
பெற்றளித்தாய் இந்நாட்டிற்கு ?
மூவருமே இயற்கையாய்
இயற்கை எய்திடாது
முழு உடலை இம்மண்ணில்
சரியாது போனதென்ன ?
தேச நலன் கருதி
செங்குருதிச் சாரல்களைப்
பூமியில் சொரிந்ததென்ன ?
ஏ ..பாதகியே !
கொடியாளே 1
கல் நெஞ்சினளே !
அன்பு முகம் பார்க்க வந்த
அனைவரையும் கொன்றாயே --என்ன செய்தார் அவர் பாவம் ?
ரத்தவெறி கொண்ட
பேடி நாயே --
எவர் பின்னால் ஏவியவர் ?
எவ்விலைக்கு உனை விற்றாய் ?
துப்பாக்கிக் கொலைஞர்களை
விடுதலை வீரராக்கிப்
புலிக் கோடிட்ட தமிழகமே !
நன்றாகத் தலை குனிவாய் ..!
--சந்திர கலாதர்
[ மே ,1991 ]
No comments:
Post a Comment