Tuesday, February 14, 2012

காற்றே மெல்ல வா!
முதுகிலே அன்பாய்த் தட்டு --
பயனற்ற பழுப்பாய்
சுமையான தொடர்பாய்
பிடிப்பிலாப் பிடிப்பாய் 
பசுமைஇடை இகழ்வாய் 
இன்னும் எத்தனை நாள் ?
என் காலம் முடிந்தது
என் தொடர் அறு-
மழைத் துளிபோல்
மண் இறங்கி 
என் மரத்திற்கே 
பொட்டு உரமாகிறேன் !
உள்வலி தாங்கவில்லை
உடனே வாராயோ ?
 
---சந்திர கலாதர்    

No comments:

Post a Comment