காற்றே மெல்ல வா!
முதுகிலே அன்பாய்த் தட்டு --
பயனற்ற பழுப்பாய்
சுமையான தொடர்பாய்
பிடிப்பிலாப் பிடிப்பாய்
பசுமைஇடை இகழ்வாய்
இன்னும் எத்தனை நாள் ?
என் காலம் முடிந்தது
என் தொடர் அறு-
மழைத் துளிபோல்
மண் இறங்கி
என் மரத்திற்கே
பொட்டு உரமாகிறேன் !
உள்வலி தாங்கவில்லை
உடனே வாராயோ ?
---சந்திர கலாதர்
No comments:
Post a Comment