புத்தம் புதுக்காலை
புத்தம் புதுச் சேதி
வானம் கொட்டுதே
மழைபோல் நனைக்குதே- .
மைனா ஒன்று தனியாய்
முகடு மீது அமர்ந்து
ஐந்தாறு மெட்டில்
அழகாய் இசைக்குதே
துள்ளச் செய்யுதே -
கீழ்த் திசை வானில்
தென்-வடல் நெடிதாய்
பூத மேகம் படுத்து
கதிரை மூட முட்டுதே -
மேகம் குத்திக் கிழித்து
ஒளிக்குழல் நூறு
வான் சீறிப் பாயுதே!
மேற்கில் மோதிச் சிவக்குதே-
டைடானிக் கப்பல் போலே
சரிபாதி உடைந்து
சந்திரன் சரிந்து கிடக்குதே -
தியானிக்கும் மரங்கள்
மௌனமொழி பேசி
அமைதி நிரப்புதே-
தினம் தினம் காலை
ஏமாந்ததேயில்லை !
----சந்திர கலாதர்
No comments:
Post a Comment